தற்கொலை செய்துகொள்ள அனுமதி; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு
தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ் ஓட்டுநரின் மனைவி, மனு அளித்துள்ளார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மனைவி வடிவு (31). அரசு போக்குவரத்து கழகம், கவுந்தப்பாடி கிளையில் ஓட்டுநராக உள்ள பாலுச்சாமிக்கும், வடிவுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாலுச்சாமி வடிவை கடுமையாக தாக்கி உள்ளார். பின்னர் எந்த உதவியும் செய்யாமல், பாலுச்சாமி மனைவி மற்றும் மகளை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.
தற்போது மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் வடிவு, தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.