/* */

கோபிசெட்டிபாளையம்: 15 வார்டில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் வீதி வீதியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம்: 15 வார்டில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்
X
வாக்காளர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் நன்றி தெரிவித்த போது எடுத்த படம் 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சியினர் 17 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் திமுகவை சேர்ந்த நாகராஜ் நகராட்சி தலைவராக பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கோபி நகராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில், நடைபெற்றது.

இதனையடுத்து, 2வது நாளான நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம் கலந்து கொண்டு, ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோபி நகர், கச்சேரிமேடு, ராம்நகர் , சீதம்மாள் காலனி, பழைய ஆஸ்பித்திரி வீதி உள்ளிட்ட இடங்களில் அந்தந்த வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் சென்று நன்றி தெரிவித்தார்.

Updated On: 21 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...