/* */

அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்ற நபர் கைது

அந்தியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி விற்பனை செய்ய கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்ற நபர் கைது
X

கைது செய்யப்பட்ட பெருமாள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் சாராய விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கிட்டம்பட்டி என்ற இடத்தில் நடந்த வாகன சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் ராமன்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பெருமாள் (வயது 35) என்பவர் பாலமலையில் இருந்து சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து பெருமாளை கைது செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார் அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்