Begin typing your search above and press return to search.
சத்தி அருகே பள்ளி சமையலர் பலி
உயர் இரத்த அழுத்தம் காரணமாக அந்தியூரை சேர்ந்த பள்ளி சமையலர் உயிரிழப்பு.
HIGHLIGHTS
அந்தியூர் அருகே உள்ள பட்லூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 57). ஆசனூர் பழங்குடியினர் அரசு மேல்நிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்தும், அங்கேயே வசித்தும் வந்துள்ளார். இவருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோய் இருந்துள்ளது . நேற்று காலை அறையில் மயங்கி கிடந்தார். மயங்கியவரை, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.