/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல்
X

பைல் படம்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.63 லட்சத்து 77 ஆயிரத்து 597ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.57 லட்சத்து 22 ஆயிரத்து 840ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.19 லட்சத்து 39 ஆயிரத்து 980ம், பவானி தொகுதியில் ரூ.16 லட்சத்து 37 ஆயிரத்து 100ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம், கோபி தொகுதியில் ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 650ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.54 லட்சத்து 5 ஆயிரத்து 858ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 545 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 38 லட்சத்து 42 ஆயிரத்து 95 சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.94 லட்சத்து 84 ஆயிரத்து 450 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 March 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்