/* */

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா..!

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா..!
X

குடியரசு தின விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடே குடியரசு தின கொண்டாட்டத்தால் கோலாகலமாக காணப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Updated On: 26 Jan 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்