/* */

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
X

கொடி கம்பம் அகற்றும் பணியில் ஈடுபட்டடுள்ள நகராட்சி ஊழியர்கள்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பேரூராட்சி பகுதியில் உள்ள சுவர்களில் எழுதப்பட்ட, அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்க வேண்டும் எனவும், பிளக்ஸ் பேனர்களையும், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து அந்தியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை, அந்தந்த, அரசியல் கட்சியினர் அகற்றி கொண்டனர். ஆனால், ஒரு சில அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்ததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இன்று பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆப்பக்கூடல், அத்தாணி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

Updated On: 28 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா