கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 29ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கோபிசெட்டிபாளையத்தில் வரும் 29ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையர் டி.ஆர்.விரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐ சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டபத்தில் 'பிஎப் உங்கள் அருகில்' எனும் பெயரில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் சந்தாதாரர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தொழில் அதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கலந்து கொண்டு, வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
முந்தைய கூட்டங்களில் மனு அளித்து, அவை நிலுவையில் உள்ளவர்களும், அதுகுறித்த விவரங்கள். ஆவணங்களுடன் நேரடியாக பங்கேற்று பயனபெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.