/* */

பிளஸ்-2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 96.98 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

பிளஸ்-2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் பேர் தேர்ச்சி
X

பைல் படம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10,753 மாணவர்கள், 12,170 மாணவிகள் என மொத்தம் 22,923 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 10,353 பேரும், மாணவிகள் 11,868 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 22,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 96.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 97.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அரசு பள்ளிகளில் 5,190 மாணவர்களும் 6,726 மாணவிகளும் என மொத்தம் 11,916 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 4,836 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவிகள் 6,452 தேர்ச்சி அடைந்து உள்ளனர். மொத்தம் 11,288 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.

Updated On: 8 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...