/* */

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பழங்கால பொருட்கள் மக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்
X

கொடுமணல் கிராமத்தில் இறுதிக்கட்ட அகழ்வாராய்ச்சி பணியை ஆய்வு செய்யும் அமைச்சர் சாமிநாதன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் இறுதிக்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தொழிற்கூடங்கள் இருந்த பகுதி, பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் கல்லறைகள் இருந்த பகுதிகளில் இதுவரை கிடைத்த பழங்கால பொருட்கள் மற்றும் ஆய்வு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் பண்டைய கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற ஆதாரங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில் 3200 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு தேவையான நிதிகள் ஒதுக்கப்படும். இதுவரை கிடைக்கப்பெற்ற பண்டைய கால பொருட்களை மக்கள் பார்ப்பதற்கு வசதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காட்சியாக வைக்கப்படும் எனக் கூறினார்.

Updated On: 11 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு