/* */

கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலி

மொடக்குறிச்சி அருகே தோட்டத்து கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலி
X
பைல் படம்.

ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர். இவர் கோபியில் சப் ரிஜிஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம் பாளையம் பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று உதயசங்கர், ராதிகா மற்றும் காசிபாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ராதிகாவின் அண்ணன் சரவண ராஜு (வயது 55) காண்டிராக்டர் ஆகிய 3 பேரும் ஆனந்தம் பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு வந்தனர். அப்போது உதயசங்கர் மற்றும் சரவணன் ராஜு ஆகியோர் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது தோட்டத்தில் இருந்த கிணற்றில் சரவணராஜு குளிப்பதற்காக இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி விட்டதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரவன ராஜு உடலை மீட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!