/* */

அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைப்பு

அந்தியூர் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர்தேக்க தொட்டியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைப்பு
X

அந்தியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள கலைஞர் வீதியில் புதிய நீர்த்தேக்க தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள கலைஞர் வீதியில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்றும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தார்.

Updated On: 29 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்