/* */

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் உயிரிழப்பு

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி 2 வயது ஆண் மயில் உயிரிழந்தது.

HIGHLIGHTS

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில்.

ஈரோடு சங்குநகர் அருகே தென்றல் நகர் 7வது வீதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்த ஈரோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தது 2 வயது ஆண் மயில் என்பதும், உணவு தேடி பறந்து வந்தபோது, அங்கு இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி மயில் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இறந்து போன மயில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 July 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்