/* */

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

அந்தியூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தவிட்டுப்பாளையம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்ற ராமகிருஷ்ணன் (34), அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (வயது 50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, சிவசக்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட கணேசன் (வயது 52), புதுப்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் (வயது 35) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த, போலீசார் 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், சக்திவேல் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!