Begin typing your search above and press return to search.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,200 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4வது முறையாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (08.08.2022) நீர்மட்டம் நிலவரம் நண்பகல் 12 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு - 18,200 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 18,000 கன அடி .
இன்று, காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையிலிருந்து 12,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 18,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் கரையோர மக்களுக்கு 4-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது