/* */

ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழ் கலாசாரத்தை அழிக்கும் ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் கூறினார்.

HIGHLIGHTS

ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்
X

மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி திருப்பூர் கோட்டம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழ் கலாசாரத்தை அழிக்கும், ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க வேண்டும். சித்திரை முதல் நாளான, தமிழ் புத்தாண்டை மாற்ற திமுக அரசு முயற்சி செய்கிறது. இதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை இடிக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால், மடாதிபதிகள், இந்துக்களை திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம். திமுகவின் 200 நாள் ஆட்சியில், 133 கோவில்களை இடித்து சாதனை செய்துள்ளனர். இந்து கோவில் வழிபாட்டுக்கு தடை போடுகின்றனர். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழாவை, வழக்கம்போல் நடத்த வேண்டும். குண்டம் இறக்க பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 20 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!