Begin typing your search above and press return to search.
பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி கோட்ட மின்சார வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதி நுகர்வோருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், மேட்டூர் - பவானி சாலையில் ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பவானி கோட்ட பகுதிக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.