/* */

ஈரோடு காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானி காவிரி கரையோர வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

கர்நாடகா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு 4,000 கன அடி நீர் என மொத்தம் 1லட்சத்து 14 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் செல்வதால், ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகளான அம்மாபேட்டை, பவானி, ஈரோடு கருங்கல்பாளையம், வைரபாளையம், வெண்டிபாளையம், கொடுமுடி ஒன்றிய பகுதி காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை மற்றும் பசுவேஸ்வரர் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் மற்றும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Aug 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...