Begin typing your search above and press return to search.
கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகத்தின் பூட்டை உடைத்து திருட்டு
கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகத்தின் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் உசேன். கவுந்தப்பாடி நால்ரோட்டில் பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, உணவகத்தை பூட்டிவிட்டு சென்ற இவர், நேற்று காலை திறக்க வந்தார். அப்போது உணவகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.