Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு சர்க்கரை ஆலையில் தீவிபத்து
கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு சர்க்கரை ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லபாலப்பாளையம் அடுத்த கோயில்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணகவுண்டர் மகன் கணேசன். இவர் அதே பகுதியில், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலையினை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கரும்பினை வாங்கி நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை கரும்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ கரும்பு சக்கையில் பற்றி ஆலையின் மேற்கூரை மற்றும் அருகில் நின்றிருந்த சரக்கு வேனில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கோபி தீயணைப்பு துறையினர் போராடி தீயிணை அணைத்தனர். இந்த தீ விபத்து உற்பத்தி செய்து வைத்திருந்த சுமார் 1 டன் அளவுள்ள நாட்டுச் சர்க்கரை தீயில் எரிந்து சேதமானது.