/* */

கலைஞர் நினைவுநாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் திமுகவினர் கலைஞரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

கலைஞர் நினைவுநாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் சின்னனையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மைவிழி முருகேசன், பகுதி செயலாளர் அக்னி சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வீதிகள் தோறும் ஆங்காங்கே கலைஞர் திருவுருவ படம் வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Updated On: 7 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு