/* */

ஈரோடு: கள்ளக்காதலனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலி

ஈரோட்டில், போதையில் தாக்கிய கள்ளக்காதலனை, கழுத்தை நெறித்து, கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: கள்ளக்காதலனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலி
X

கொலை செய்யப்பட்ட மதன்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்-மஞ்சு தம்பதியனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் உறவினரான பெயிண்டிங் தொழில் செய்து வரும் மதன் என்பவர், அடிக்கடி மகேஸ்வரன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் மஞ்சுவிற்கும் மதனுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது‌.

இதனை அறிந்த மகேஸ்வரன், இருவரையும் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து, 6 மாதத்திற்கு முன்பு மஞ்சுவும் மதனும், ஈரோடு முத்தம்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மதன் அடிக்கடி மதுபோதையில் மஞ்சுவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு மதுபோதையில் வந்த மதன், மஞ்சுவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, வீட்டில் இருந்த கயிறால் மதனின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து, மதனின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்