/* */

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இறந்து மிதக்கும் மீன்கள்: கழிவுநீர் காரணமா?

ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக மீன்கள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.இதனால் வாய்க்காலில் தண்ணீர் முழுமையாக வடிந்து சேரும் சகதியுமாக காணப்பட்டது.

தற்போது மாநகராட்சியின் குடியிருப்புகளின் கழிவு நீர் மட்டும் வாய்க்காலில் கலந்து ஓடி வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே, காலிங்கராயன் வாய்க்காலில் நடந்து வரும் மேம்பாட்டு பணியின் நிதியிலேயே, குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 March 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?