/* */

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் ரூ .200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம்

HIGHLIGHTS

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்
X

ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் 

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்து கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிட்டு இயக்கப்படவில்லை. இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று முதல் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தாலும், துணிகள் தேக்கமடைந்து வருவதாலும் உற்பத்தியை நிறுத்தி உள்ளோம். கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ. 200 கோடி வரை மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Updated On: 6 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...