/* */

ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..

தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..
X

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதையடுதாது, 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 15ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பை ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்