/* */

ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல்விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டர் அணி செயலாளர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு, மின்சாரம், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். கொரோனா பரவிலின் போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முன்னதாக கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 5 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’