/* */

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ஈரோடு மாநகரில், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வீடு வீடாக அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடையை சுத்தப்படுத்தும் பணி, கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தற்போது டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி 300 வீட்டுக்கு ஒரு கொசு புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50-க்கு வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்வார். ஒருநபர், ஒருநாளைக்கு 50 வீடுகள் வீதம், ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.

இது குறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மாநகர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வீடுவீடாக சென்று, மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள். முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிரட்டை, பழைய டயர்கள், உபயோகிக்காத பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்துத் தெளிக்கபப்டும். தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாநகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள் வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 15 July 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை