/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காங்கிரஸார் சைக்கிள் பேரணி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சினர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வு :  காங்கிரஸார் சைக்கிள் பேரணி
X

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடந்த சைக்கிள் பேரணியில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கலந்து கொண்டார். 

பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்ப்பில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடைபெற்று வருகிறது. அவ்வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கலந்து கொண்டார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியானது, ஈரோடு பேருந்து நிலையம், தெப்பக்குளம் வீதி, பிரப் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 12 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...