/* */

ஈரோடு: துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து பலி

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு: துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து  பலி
X

பைல் படம்.

ஈரோடு முனிசிபல் சத்திரம் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). மாநகராட்சி 1-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளராக கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நுரையீரலில் நீர் கோர்த்து நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2 கால்கள் வீக்கமாக இருந்ததால் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் உதவியுடன் வீட்டிற்கு அருகே உள்ள பொது கழிப்பிடத்திற்கு முருகேசன் சென்றார். திரும்பி வரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!