/* */

ஈரோட்டில் பட்டாசு வெடிக்க பயன்படும் நீள பத்தி உற்பத்தி தீவிரம்

கனிராவுத்தர் குளம் அருகே சாதிக் என்பவர் கடந்த 42 ஆண்டாக பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

HIGHLIGHTS

ஈரோடு, சூளை கனிராவுத்தர் குளம் அருகே பச்சைப்பாளிமேட்டில், சாதிக் என்பவர் கடந்த, 42 ஆண்டாக தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து சாதிக் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், 2.5 அடி நீளமுள்ள பத்தி, நான்கு லட்சம் எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். தீபாவளிக்கு ஐந்து மாதம் முன் உற்பத்தியை துவங்கி, தமிழகம் முழுவதுக்கும், கேரளா, கர்நாடகாவுக்கும் அனுப்பி வைப்போம். இந்தாண்டு ஊரடங்கு, பெங்களுருவில் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தி நடப்பதுடன், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பத்தி அனுப்பும் பணி நடக்கிறது.

கடந்தாண்டுகளில் மொத்த விற்பனையில் ஒரு பத்தி, 3 முதல், 3.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வோம். இந்தாண்டு கரித்துாள், மரத்துாள், தென்னங்குச்சி என மூலப்பொருள் விலை உயர்ந்து, 4 முதல் 4.50 ரூபாய்க்கு விற்கிறோம். இதனை குடிசைத்தொழிலாக செய்வதால், அதிகமாக செய்து இருப்பு வைக்க இயலாது.

இப்பத்தியை பாதுகாப்பானதாகவும், குழந்தைகள், பெரியவர்கள் கைகளில் கரித்துாள், மரத்துாள் பட்டாலும் பக்கவிளைவு ஏற்படாமல் செய்வதால், இதனை விரும்பி வாங்குவார்கள். ஒரு பத்தி, ஆறு மணி நேரம் எரியும்படி செய்கிறோம். கடைகளில் இதனை, எட்டு முதல், பத்து ரூபாய்க்கு விற்கின்றனர். இன்னும் தீபாவளிக்கு 15 நாட்கள் உள்ள நிலையில், பத்தி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ளோம், என்றார்.

Updated On: 20 Oct 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை