/* */

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டு வேறு ஆட்களை ஒப்பந்ததாரர் நியமனம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய  பணியாளர்கள்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு
X

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடந்தது. அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களுக்குரிய குறைகள் பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்படி இன்று பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமூக பரப்புரையாளர் ஆக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து பணியாற்றிய பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் ஈரோடு மாவட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் சமூக பரப்புரையாளர் களாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தோம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டு வேறு ஆட்களை ஒப்பந்ததாரர் நியமனம் செய்து ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நான்கு மாத சம்பள தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறார்.

கொரோனா தொற்று காலத்தில் மாவட்டம் முழுவதும் கடும் சவால்கள் உடன் பணியாற்றினோம். ஆட்சி மாற்றத்திற்கு பின் எங்கள் பணிக்கு வேறு ஆட்களை நியமனம் செய்வதால் நாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். எனவே ஆட்சியர் அவர்கள் மாவட்டம் முழுவதும் அதே பணியாளர்களை பணி செய்திட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடும்படி மனு அளித்துள்ளனர்.

Updated On: 15 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்