/* */

திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருநங்கையை 25 லட்சம் பணம் கேட்டு கடத்த முயற்சிப்பதாக மாணிக்கம் என்கிற செல்வி காவல் அலுவலகத்தில் புகார்.

HIGHLIGHTS

திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்
X

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த திருநங்கை மற்றும் குடும்பத்தினர். 

ஈரோடு பெரியவலசு, இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற செல்வி (40). திருநங்கையான இவர் இன்று தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்ட எஸ். பி. அலுவலத்திற்கு வந்து எஸ்.பி. சசி மோகனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்படி முகவரியில், எனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன். நான் சொந்தமாக தறிப்பட்டறை, டிராவல்ஸ், நிதி நிறுவனம் மற்றும் சிறு, சிறு தொழில் செய்து வருகிறேன்.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர், கடந்த 3 மாதமாக என்னை போனில் தொடர்பு கொண்டு ரூ. 25 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னை கடத்தி விடுவதாக மிரட்டி வருகின்றனர். மிரட்டல் விடுக்கும் 4 பேர் மீதும் ஏற்கனவே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், எனது குடும்பத்தாரையும் அவர்கள் நேரடியாகவும், போனிலும் மிரட்டி வருகின்றனர்.

இதனால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த 4 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவவாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Updated On: 2 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்