Begin typing your search above and press return to search.
தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதம் செய்தன.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள காந்திநகர் கிராமமானது தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்டது. வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில், சோமையன் என்பவர் தனது நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், மக்காச்சோள பயிர்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.