/* */

கோபிசெட்டிபாளையம்: இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு வந்ததால் பரபரப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் பகுதியில், இறந்ததாக கருதப்பட்ட நபருக்கு இறுதிச் சடங்கு முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், அந்த நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம்: இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு வந்ததால் பரபரப்பு
X
மூர்த்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி, கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன், கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி, பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கார்த்திக்குக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, கார்த்திக் சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்தது. அந்த நபருடைய உருவம் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தைதான் என கார்த்திக் முடிவு செய்தார்.உடனே உடலை எடுத்துக்கொண்டு புஞ்சை துறையம்பாளையம் கொண்டு சென்று அந்த உடலை முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தார்.

இந்நிலையில், மூர்த்தி திடீரென நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் புஞ்சைதுறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 5 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...