/* */

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு நேற்று 2 பேருக்கு தொற்று பரவிய நிலையில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்தது.

மேலும் இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 5 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Updated On: 6 Jun 2022 2:00 PM GMT

Related News