/* */

ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் வழங்கி ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு.

HIGHLIGHTS

ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில், அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம், முழுவதும் 1,157 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் மாதம் தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கும் போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறு ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிய ரேஷன் கார்டுகள் மூலம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்படுவார்கள். இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 3 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்