/* */

கோபிசெட்டிபாளையம் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.63 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இன்று தேங்காய் பருப்பு கிலோவிற்கு 7 ரூபாய் அதிகரித்து உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபி சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரம் தோறும் நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்தில் கோபி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், டி.என்.பாளையம்,நம்பியூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100 கணக்கான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ 91 ரூபாய்க்கு விலை போன நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 98 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 89 ரூபாய்க்கும் சராசரியாக 97 ரூபாய்க்கும் விலை போனது. இன்று 44 மூட்டைகளில் 1 ஆயிரத்து 793 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்த நிலையில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 757 ரூபாய்க்கு விலை போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 3 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...