Begin typing your search above and press return to search.
டி.என்.பாளையம்:புத்தக கண்காட்சியினை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
டி.என்.பாளையம் அருகே நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நூலக வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரத்தை செலுத்தி நூலக கொடையாளராகவும், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் சிவபாலன் நூலக புரவலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், வாணிபுத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கதிர் என்கிற கருப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. சுப்பிரமணி, வாணிபுத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், மாவட்ட பிரதிநிதி சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.