/* */

தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்

புஞ்சை புளியம்பட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்.

HIGHLIGHTS

தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி, கோட்டப்பாளையம் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில், இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்ததில் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்த பகுதியில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு சென்று விட்டதால், அங்கிருந்த சிலர் தாமாக முன்வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் மற்றும் நம்பியூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்ததால், தீ மேலும் மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் சின்ன பழனி மற்றும் ராமாள் ஆகியோருக்கு சொந்தமான இரு வீடுகளும் முழுவதும் தீக்கிரையாகியதோடு, வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில்கருகி சாம்பல் ஆனது.

Updated On: 17 Feb 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்