Begin typing your search above and press return to search.
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை, வாய்க்கால்பாளையம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் அருண் (வயது 25). மினி ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு மயிலம்பாடி - கன்னடிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.