/* */

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை

ஈரோட்டில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியானதால் சர்ச்சை.

HIGHLIGHTS

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை
X

வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்த வக்கீல் விஜயலட்சுமி.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பவானி வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து பல்வேறு வழக்குகளை பவானி சார்பு நீதிமன்றத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் சேர்ந்து பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் காவலரின் இத்தகைய செயலுக்கு பவானி வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்