/* */

கைத்தறி ஜமுக்காள நெசவாளர்களுக்கு போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பவானி வட்டாரத்தில் கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.230 கூடுதலாக போனஸ் வழங்க முடிவு.

HIGHLIGHTS

கைத்தறி ஜமுக்காள நெசவாளர்களுக்கு போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
X

கைத்தறி நெசவு.

கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்கு போன்ஸ் வழங்க வேண்டும் என பவானி வட்டார கைத்தறி ஜமுக்காள, பெட்ஷிட் நெசவாளர், சாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் சங்கப் பிரதிநிதிகள். நெசவுக் கூட உரிமையாளர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையுடன் ரூ. 230 கூடுதலாக சேர்த்து இம்மாதம் 30ஆம் நேதிக்குள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், தொழிற்சங்கச் செயலாளர் வ.சித்தையன், பொருளாளர் கோவிந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்.பூபதி, எஸ்.பி.எம்.கல்யானாசுந்தரம், நெசவுக் கூட உரிமையாளர்கள் தரப்பில் கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்