/* */

அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது

அந்தியூரில், இருவேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஒந்தனை பகுதியைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்தியூர் தாசளியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மணிகண்டன் அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து. அங்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேபோல், ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் தொடர்புடைய சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவரை, பவானி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 22 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...