/* */

ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி கைது

அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்றுள்ளார். பின்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தையடுத்து, சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தேவராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், சம்பவம் குறித்து சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார் . பின்னர் வழக்கு குறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்று அதிகாலை, தவிட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த தேவராஜனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!