/* */

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

பட்டாசு வெடித்து கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர். 

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், விவசாயிகள் மற்றும் கட்சியினர் பல கட்டப் போராட்டங்களை நடத்தினார். இந்நிலையில், மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் அறிவித்தார்.

இதையடுத்து, இன்று மாலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகிலும், அரசு மருத்துவமனை அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கொண்டாடினர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, தாலுகா செயலாளர் ஆர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ் வி மாரிமுத்து, தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கள் பழனிச்சாமி, தியாகராஜன், செபஸ்தியான், கிளைச் செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை