/* */

பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்

பவானி அருகே மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து 6 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானி அருகே உதவி செய்வது போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்
X

சித்தோடு காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர் பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

பின்னர், நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Sep 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?