/* */

கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி குருணை மருந்தை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபி அருகே குருணை மருந்தை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடுதோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோபிகா(வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு, நாட்டு வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 17ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாமல் கோபிகா குருணை மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர், பெற்றோர் கோபிகாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபிகா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Aug 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...