/* */

சத்தியமங்கலம் அருகே காட்டாற்று சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேற்றில் சிக்கிய அரசு பேருந்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே காட்டாற்று சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து
X

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோவிலூர், அரிகியம், கோம்பை தொட்டி, கோம்பையூர் கிராமங்களில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.

வன கிராமங்களை சேர்ந்த மக்கள் அடர்ந்த வனப்பகுதி வழியாக கரடுமுரடான மண் சாலையில் வனப்பகுதியில் ஓடும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளை கடந்து கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்திற்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் வன கிராமத்திற்கு 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, வனப்பகுதியில் உள்ள சர்க்கரை பள்ளம் காட்டாற்றை கடந்த போது, பஸ்சின் சக்கரம் சேற்றில் புதைந்து நகர முடியாமல் நின்றது.

இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கீழே இறங்கி பள்ளத்தில் இருந்த கற்களை எடுத்து சக்கரங்களுக்கு அடியில் போட்டு பேருந்தை தள்ளி மீட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Updated On: 27 March 2023 12:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்