/* */

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது தவறவிட்டஅலைபேசியில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ இருந்துள்ளன

HIGHLIGHTS

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
X

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் மூலம் சிறுமிகள் சம்பந்தமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் வேடசந்துார் மருந்தாளுனர் தங்கராஜா(48)வீட்டில் சி.பி.ஐ., போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிறுமிகள் பாலியல் குறித்து வீடியோ பார்த்தது , பதிவேற்றம் செய்தது தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் 83 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 76 இடங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் திருப்பூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆகிய 6 இடங்களில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேடசந்துார் ஆர்.எச்., காலனியை சேர்ந்த இவர், அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக உள்ளார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு சி.பி.ஐ., போலீசார் 7 பேர் வந்து சோதனை, மற்றும் விசாரணை நடத்தினர். பிரின்டர், அலைபேசி, மெமரி கார்டுகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது அலைபேசியை தவறவிட்டுள்ளார். அதில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.அதன் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என தெரிவித்து சென்றுள்ளனர். ஆனால் உள்ளூர் போலீசாருக்கு விசாரணை குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை.

Updated On: 17 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!