/* */

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு

நத்தம் அருகே, தொடக்கப்பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது; உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு
X

பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி, பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது, 2 கட்டிடங்களில் செயல்படுகிறது . இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, நேற்று பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

அப்போது, சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டர் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நத்தம் தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சத்துணவு மையத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.

துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் நாளே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?